Ad Widget

வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் லலித் பீரிஸ்,யாழ்.மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts