வீடு மற்றும் கடைகளின் உரிமையார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டோரிடம் வாடகைக் கட்டணத்தை அரைவாசியை வசூலிக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மற்றும் புற நகர்களில் தங்கியிருந்து உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களிடம் வாடகைக் கட்டணத்தின் அரைவாசியை வசூலிக்குமாறு அரசு கேட்டுள்ளது.
வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு வழங்கியிருப்பவர்களும் வாடகைக் கட்டணத்தை அரைவாசியாக வசூலிக்குமாறும் அரசு கோரியுள்ளது.