Ad Widget

விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்

செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப் பிரிவினரால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த அதிபரைக் கைதுசெய்த பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபரை செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts