Ad Widget

விமானப் படையின் அம்புலன்ஸ் மோதி குடும்பத்தலைவர் சாவு!

விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.

பளையில் இன்று காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது.

பளை – தம்பகாமம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts