Ad Widget

விபத்து : வயோதிப பெண் படுகாயம்

accidentவண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அப் பெண் படுகாயமடைந்துள்ளதுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (04) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாயைச் சேர்ந்த ச.அருள்சோதி (வயது 67) என்பவரே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts