Ad Widget

விபத்தில் வயோதிபர் படுகாயம்

பருத்தித்துறை கந்தவுடையார் சந்தியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற விபத்தின்போது வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் துவிச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த அதேயிடத்தைச் சேர்ந்த செல்வமாணிக்கம் அப்புத்துரை (வயது 64) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts