பளை, இத்தாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இயக்கச்சி மாசாரைச் சேர்ந்த வைரமுத்து குமாரவேலு (வயது 63) என்பவரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளார்.
வயோதிபரை மோதிய டிப்பர் வாகனம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.