Ad Widget

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

ஏ– 9 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற விபத்தில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

டபிள்யு.ஏ.பியந்த (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே படுகாயமடைந்தவராவார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின், நீதிமன்றத்துக்கான கடமைகளை செய்யும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ஞாயிற்றுக்கிழமை காலை நீதவானின் வாசஸ்தலத்துக்கு சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது, பின்னால் வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து இவரை மோதியுள்ளது.

தலையில் கடுமையான பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மோதிய வாகன சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts