Ad Widget

விபத்தில் இருவர் படுகாயம்

மீசாலை ஐயா கடையடிச் சந்தியில் புதன்கிழமை (18) காலையில் சிறிய ரக உழவு இயந்திரமும் வான் ஒன்றும் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் விநாயகமூர்த்தி (வயது 34), வரதராசன் சாந்தகுமார் (வயது 40) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts