Ad Widget

விபத்தில் இருவர் காயம்

வேகமாகச் வந்த முச்சக்கரவண்டி வீதியின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோதியதில் இருவர் படுகாமடைந்துள்ளனர்.

புலோலி, உபயகதிர்காமம் கோயில் வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் கரவெட்டி மேற்கைச் சேர்ந்த த.சுரேந்தினி (வயது – 24), த.திலக்‌ஷன் (வயது – 7) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

Related Posts