Ad Widget

வித்தியா கொலை சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவதால் இராணுவம், பொலிஸார் குவிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன் விசேடமாக அனுராதபுரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அண்மையாக நிறுத்தப்பட்டுள்ளது. தவிர ஊர்காவற்றுறையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேசமயம் அங்கு எந்த ஓர் இடத்திலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என பொலிஸார் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த மே 20 ஆம் திகதி யாழ். நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்களில் ஐவர் முற்படுத்தப்பட இருந்த சமயம் போராட்டக்காரர்கள் நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படக்கூடாது என்றே ஊர்காவற்றுறையில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts