Ad Widget

விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் விதிமுறைகளை மீறி வாகனங்களை பலர் நிறுத்திச் செல்வதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் நோயாளிகள் ஏற்றி வரும் வாகனங்கள் உட்செல்ல முடியாதவாறு வாயிலுக்கு நேரே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில வாகன ஓட்டுனர்கள் செயற்படுகின்றனர்.

வீதியில் உள்ள ஊசிக்கொண்டை வளைவிலேயே வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர்.

இவ்வாறு வாகனங்களை நிறுத்திய வாகன ஓட்டுனர் பலரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதும், வாகனங்கள் நிறுத்துவது குறைவடையவில்லை எனவும் இதுதொடர்பில், பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோருகின்றனர்.

Related Posts