Ad Widget

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரு இளைஞசர்கள் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரு இளைஞசர்களின் வயது 18 மற்றும் 23 வயது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts