Ad Widget

வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையம் ஒன்றில் மது அருந்திய நபர்களிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அது குழு மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதல் பின்னர் வலுவடைந்து வாள்வெட்டு சம்பவமாக மாறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், காயமடைந்த நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தை அடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகின்றது.

வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இராணுவ முகாம் ஊடாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருவதுடன், குறித்த தேடுதலில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts