Ad Widget

வாள்வெட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு பிணை!

வாள்வெட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு யன்னல் கண்ணாடிகள் உட்பட பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுப்பட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

அந்தக் கும்பல் தப்பித்த வேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. அதிலிருந்து 8 பேரும் தப்பி ஒட்டியுள்ளனர்.

இதன் பின்னர் ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுத்திருந்த நிலையில் வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உட்பட 5 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நேற்று மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பதை முன்வைத்தார். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

தொடர்ந்தும் வழக்கு விசாரணையை மேற்கொண்டமாவட்ட நீதிபதி, விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள்கள் ஐவரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இதேவேளை, உடுவில் அம்பலவாணர் வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுக்கும் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கும் தொடர்புள்ளதா? என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts