Ad Widget

வாள்வெட்டில் இளைஞர் படுகாயம்

மந்திகைச் சந்தையில் திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில், தலையில் படுகாயம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தனர்.

புலோலி கம்பவதியை சேர்ந்த நடராஜா மனோகரன் (வயது 21) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
சந்தையில் வெற்றிலை வியாபாரம் செய்யும் இவரை, சந்தைக்குள் நுழைந்த கும்பலொன்று வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts