Ad Widget

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!

வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன் என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில், என்று குறிப்பிடப்படுகிறது.வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது.அப்படியான ஓர் அரிய நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு அறிவித்துள்ளது..

இன்று இரவு தோன்றும் நிலவு நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது.

இது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களால் அவதானிக்க கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி முதல் முறையும், இன்று இரண்டாம் முறையும் தோன்றுகிறது.

இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலவு நீலமாகத் தோற்றமளிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும் என்று அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பான ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த நீல நிலவு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று அந்த அமைப்பின் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை நீல நிலவு மாலை 6.13 மணி தொடக்கம், இரவு 7.28 மணிவரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்..

Related Posts