Ad Widget

வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகள் மூடிமறைப்பு –

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையங்களிலுள்ள சரஸ்வதியின் கைகளிலுள்ள வீணையை தேர்தல் கண்காணிப்பாளர்கள் துணியினால் மூடிமறைத்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளிலுள்ள சரஸ்வதி கைகளிலுள்ள வீணைகள் வெள்ளத் துணியினால் மூடிமறைக்கப்பட்டுள்ளன.

இதுவிடயம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனிடையே வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாகவுள்ள ஏனைய கட்சியின் சின்னங்களாக கருதப்படும் வீடு, சைக்கிள் உள்ளிட்டவற்றை மூடிமறைக்க முடியுமான என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Posts