யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சார நிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி என்பவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான வின்சென்ற் கெனடி கழக மத்தியகுழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பருத்துத்துறை நகரபிதாவுமாவார்.
திருமலையில் கடந்த திங்கட்கிழமை (07.09.2015) இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து திருமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை (09.09.2015) அவர் உயிரிழந்துள்ளார்.