Ad Widget

வாகனம் மோதி ஆலய வாகனங்கள் சேதம்

accidentஇன்று காலை 6 மணியளவில் யாழ். நாச்சிமார் கோயிலடியில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இவ் விபத்துக்குறித்து தெரியவருவதாவது கே.கே.எஸ் வீதியினூடாக காங்கேசன் துறைநோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினருக்குச் சொந்தமான கனரகவாகனம் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் யாழ் நாச்சிமார் ஆலய வாகனங்கள் பாதுகாத்து வைக்கப்படும் வாகனசாலையினுள் உட்புகுந்ததினால் ஆலய வாகனங்கள் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளன.

Related Posts