Ad Widget

வவுனியா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!!

வவுனியா, பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருவதுடன் தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts