Ad Widget

வவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம் மற்றும் வெடுக்குநாறி மலைப்பகுதிகளுக்கு வட மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி,கே. சிவஞானம் தலைமையிலான 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர்.

வவுனியா வடக்கில் பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர்.

இந் நிலையில் 2011 ஆம் ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய இம் மக்களுடன் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன் காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

எனினும் அவர்கள் அங்கு வாழ்வதற்கு வன இலாகாவினர் அனுமதி மறுத்து வந்திருந்ததுடன் குறித்த பகுதி வன வளத்திணைக்களத்திற்குரிய பகுதி என தெரிவித்து குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்திருந்தனர்.

இதன் காரணமாக அம் மக்களுக்கு தேசி வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வட மாகாணசபையின் கவனத்திற்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் கொண்டு வந்ததை அடுத்து வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் தலைமையில் இதன்போது வி.வி.கே. சிவஞானத்துடன் வடக்கு விவசாய அமைச்சர் க. சிவநேசன், உறுப்பினர்களான சபா. குகதாஸ், எம். கே. சிவாஜிலிங்கம், இ. ஜெயசேகரன், அ. பரஞ்சோதி, ப. அரியரட்ணம், கே. தர்மலிங்கம், வ. கமலேஸ்வரன், ஆ. புவனேஸ்வரன், து. ரவிகரன், சு. பசுபதிப்பிள்ளை ஆகிய 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி நிலைமைகளை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் இடிந்து போயுள்ள நாவலர் பண்ணை அரசினர் கலவன் பாடசாலையினையும் பார்வையிட்டிருந்ததுடன் அதனை மீள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பது தொடர்பாகவும் மாகாணசபை உறுப்பினர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளர்கள் உள்ளது. எனினும் வன வளத்திணைக்களம் மக்களை அங்கு குடியேற தடை விதித்து வருகின்றனர்.

இது தெர்டர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் உவனம் செலுத்தி இந்தியாவில் ஈரந்து வந்த மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

Related Posts