Ad Widget

வவுனியா பஸ் நிலையப்பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்

கடந்த 23.07.2015 அன்று வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.

தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கோமா நிலையிலேயே இருந்துள்ளார்.

இன் நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இவர் மரணமடந்துள்ளதாக வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணமடைந்தவர் திருமணமாகி ஒரு மாதமே ஆன வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராசா சுரேந்திரன் (வயது 29) என்பவராவார்,

கொலையாளியைத் தேடிவரும் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts