Ad Widget

வவுனியாவில் வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரணப் பணிகள்

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம்தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

7

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகித்துள்ளன.

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின்கீழ் நடைபெற்ற நிவாரணப்பணிகளில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

முதற்கட்டமாக புதியவேலர் சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், மாதர் மாணிக்கர் மகிழங்குளம், கொந்தக்காரன்குளம், கதிரவேலர்பூவரசன்குளம், ஓமந்தை அரசன்குளம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை வவுனியா மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் உதவிகள் விநியோகிக்கும் பணிகள் தொடாந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படங்களுக்கு..

Related Posts