Ad Widget

வவுனியாவில் கடும் மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வவுனியாவில் நேற்று மாலை வேளை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் – வவுனியா வீதி, பண்டாரிகுளம்- வேப்பங்குளம் வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதி என்பன கடும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தன.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. இது தவிர தேக்கவத்தை, மூன்று முறிப்பு, பண்டாரிகுளம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் இடி மின்னல் தாக்கம் காரணமாக திருநாவற்குளத்தில் ஒரு வீடு மற்றும் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

Related Posts