Ad Widget

வவுனியாவிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு பகுதியில் கூட்டு வன்புனர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட 18 வயது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஒரு மணிநேரம் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன் ஒன்று கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ‘அரசாங்கமே மாணவர் சமூகத்திற்கு பாதுகாப்பைத் தா’, ‘குற்றவாளிகளை விரைவாக கண்டு பிடி’, ‘பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா’, ‘குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கு’, ‘நீதித் துறையே மாணவிகளுக்கு பாதுகாப்பு தா’, ‘நேற்று கிருசாந்தி இன்று வித்தியா நாளை யாரோ…?’ என கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

Related Posts