Ad Widget

வழிப்பறி கொள்ளையர்கள் சங்கானையில் கைது

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சங்கானை வீதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் இவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், யாழின் பல பாகங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைகளுடன் இவர்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Related Posts