Ad Widget

வல்வெட்டித்துறையில் 2KG ஹெரொயின் மீட்பு

வல்வெட்டித்துறை பகுதியில் 2kg கிலோ ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில் குறித்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் போதைபொருள் கொண்டுவரப்படுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி போதைபொருள் யாழ்ப்பாணம் ஊடாக வேறு பகுதிக்கு கடத்தி செல்ல ஒழுங்கமைக்கப் பட்டிருந்ததாகவும் இதனுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படை மற்றும் மதுவரி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts