Ad Widget

வலி.வடக்கு பிரதேச சபை பணிப் புறக்கணிப்பு!

valy-north-tellippalaiவலிகாமம் வடக்கு, நல்லூர், வலி.தென்மேற்கு, கரைச்சி ஆகிய பிரதேசசபைகளில் உள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் உள்வாங்கப் பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் தமது பிரதேசசபைக்கு சுகாதாரப் பரிசோதகரை வழங்குமாறு கோரியும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

“உள்ளுராட்சி அதிகாரங்களைப் பறிக்காதே!” “பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் எமது பிரதேசசபைகளுக்கு வழங்கு”, “ஆளுநரே! உள்ளூராட்சி அதிகாரங்களில் தலையிடாதே!, “பிரதேசசபைகளைச் சுயாதீனமாக இயங்கவிடு!” போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கியவாறு இவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

இதில் பிரதேசசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts