Ad Widget

வலி.மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய கட்டடம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய இரண்டு மாடிக்கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்று நண்பகல் 12.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வழக்கம்பரை அம்மன் கோவிலில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய வாசலில் இருந்து ஊர்வலமாக பிரதேச சபைக்கு அழைத்துவரப்பட்டு முதலமைச்சரால் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

vigneswaran_opening_001

மேலும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஜங்கரநேசன் எஸ்.குருகுலராசா, டெனிஸ்வரன், சத்தியலிங்கம் உட்பட வட மாகாண சபையின் பிரதம செயலாளர், உள்ளுராட்சி திணைக்கள ஆனையாளர் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

vigneswaran_opening_004

vigneswaran_opening_007

தொடர்புடைய செய்தி

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப்பிரமாணம்

Related Posts