Ad Widget

வறட்சியான காலநிலை : 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலையினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 அயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர், திருகோணமலை, கண்டி, நுவரெலியா, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வறட்சியான காலநிலையினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வயல் நிலையங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக நீர் வழங்கல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts