Ad Widget

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்து கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts