கடந்த 2013ஆம் ஆண்டு நிலவிய வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,761 யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய காப்புறுதி நிதியத்தால் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ககமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் அழிவின் தன்மை மற்றும் அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.