Ad Widget

வன்முறைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்

Call-telephoneவடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் தினைக்களம் அறிமுகப்படுத்தி உள்ளது.

011-2877612 மற்றும் 011-2877618 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தமது முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் அர்.எம்.எ.எல்.ரத்நாயக தெரிவித்தார்.

அத்துடன், முறைபாடு செய்வோர் தங்களுடைய விபரங்களை 011-2877613 என்ற தொலைநகல் (Fax) ஊடாக அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இறுதி வாக்குப்பெட்டி வாக்கு எண்னும் நிலையம் சென்றடையும் வரை முறைப்பாடுகளை தொலைபேசி ஊடாகவோ தொலைநகல் ஊடாகவோ எற்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் அர்.எம்.எ.எல்.ரத்நாயக மேலும் தெரிவித்தார்

21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் இறுதி வாக்குப்பெட்டி வாக்கு எண்னும் நிலையம் சென்றடையும் வரை தேர்தல் வன்முறைக தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்கள்

வவுனியா – 011-2877061/ 011-2877076(Fax)
மன்னார் – 011-2877056
முல்லைத்தீவு/ கிளிநொச்சி – 011-2877054 / 011-2877081(Fax))
யாழ்ப்பாணம் – 011-2877053
நுவரெலியா – 011-2877051/ 011-2877075(Fax))
மாத்தளை – 011-2877050 /011-2877074(Fax))
கண்டி – 011-2877047 / 011-2877073(Fax))
புத்தளம் – 011-2877042 /011-2877069(Fax))
குருநாகல் – 011-2877041 /011-2877065 (Fax))

Related Posts