Ad Widget

வட மாகாண சபையில் மேலும் ஒரு பிரேரணை நிறைவேற்றம்

northநேற்றும் ஒரு பிரேரணை வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகவல் முகாமைத்துவ மீளாய்வு ஸ்தாபனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றை 2014ஆம் ஆண்டு ஸ்தாபிப்பதற்கான மீளாய்வு பிரேரணை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டது.

இதனை வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் வழிமொழிந்தார். தொடர்ந்து சபையின் முழு உறுப்பினர்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts