Ad Widget

வட மாகாண சபைத் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தனித்துப் போட்டி?

daklasவட மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிக்கட்சியாக ஈபிடிபியும் இடம்பெற்றுள்ள போதிலும், வட மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஈபிடிபி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புகள் உள்ளன.

இதையடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயாநிதி மாஸ்டரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறித்து அவர் உறுதிப்படுத்தாத போதிலும், இன்னும் இரண்டு வாரங்களில் தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts