Ad Widget

வட மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள் – வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளை, 30 தொடக்கம் 60 வயது வரையானோருக்கு தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்படுவதுடன், அவர்கள் குறித்த பெயர் விபரங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்களே ஒழுங்குபடுத்தி அழைத்துவருவர்.

வடக்கில் தடுப்பூசி போடுவதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும், தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்றார்.

Related Posts