Ad Widget

வட, கிழக்கில் சகல ஜனநாயக சந்தர்ப்பங்களிலும் மஹிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்

எமது மக்களைப் பார்த்து தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விடுதலைக்காக ஜனநாயக முறைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட போது, உலகில் நடைபெற்ற போராட்டங்களைப் போல, இங்கும் ஒரு ஆயுதப் பேராட்டம் இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி விட்டேன் என்று கூறினார் மஹிந்த ராஜபக்ஷ.

எமது மக்களைப் பார்த்து தோற்றுப் போன சமுதாயம் என்று சொன்னார். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அணைத்து ஜனநாயக சந்தர்ப்பங்களிலும் ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

மிகத் துல்லியமான சிந்தனை, சிறந்த இராஜதந்திர ஆற்றல், அறிவு கொண்ட எம் மக்கள் மிகுந்த ஜனநாயகவாதிகளாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம், எனக் கூறியுள்ளார்.

Related Posts