Ad Widget

வட்டுக்கோட்டையில் பெரும் தேடுதல் 300 க்கும் மேற்பட்டோர் விசாரணை

tna_attack_army_002வட்டுக்கோட்டை பகுதி சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் மட்டும் இன்று காலை முதல் விளையாட்டு மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரவிரவாக நடைபெற்ற தேடுதலில் இராணுவத்தினர் மதில் பாய்ந்தும் , வேலிகளை வெட்டியும் வீடுகளுக்குள் உள்நுழைந்து உரிமையாளர்கள் இல்லாத வீடுகளின் கதவுகளை உடைத்தும் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

600 க்கும் அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதேவேளை பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் இராணுவத்தினர் திடீரென நுழைந்து சோதனை மேற்கொள்வதால் அப் பகுதி மக்கள் பெரும் பீதியுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts