வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சுகவீனம் காரணமாக சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இவர் தொடர்ந்து 03 நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இதய சிகிச்சைப் பிரிவில் வைத்தே இவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் சி.வி.விக்னேஸ்வரன் ‘கோல்டர்’ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.