Ad Widget

வடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி

Jagath_Jayasuriya_armyவட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’ என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, நேற்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி படைத்தளத்தை வந்தடைந்த இராணுவ தளபதியை கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜல் ஜெனரல் உதய பெரேரா வரவேற்றார்.

இதனையடுத்து படைத்தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட இராணுவ தளபதி, அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அனைவரும் உறுதிபூண வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

‘வட மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts