Ad Widget

வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு கொலைமிரட்டல் விடுத்து கப்பம்கோரியவர் கைது!

வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தொலைபேசிமூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம்கோரிய நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம் கோரியதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடொன்றை சத்தியலிங்கம் பதிவுசெய்திருந்தார்.

இதனையடுத்து வவுனியா காவல்துறையினரால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன்போது கிளிநொச்சி இரத்தினபுரத்தில் பிறந்து வவுனியா புதுக்குளத்தில் வசித்துவரும் 38 வயதான மாடசாமி சுதாகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்டக் காவல்துறையினர் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவேளையில் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் தன்னை ஒரு இராணுவப் புலனாய்வாளர் எனவும், தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர் எனவும், பலபேரிடம் கப்பம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளார் என வவுனியா மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts