Ad Widget

வடமராட்சி கிழக்கில் கிளைமோர்த் தாக்குதல்; துன்னாலையில் ஒருவர் ரிஜடியினரால் கைது

வடமராட்சி கிழக்கு, முச்சந்தியில் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் கிளைமோர் தயாரித்து பொருத்திய சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக நேற்றையதினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Posts