எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் மலையகத்திலும் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தனித்து போட்டியிடவுள்ளது.
தமது கட்சியின் சின்னமான ஏர் சின்னத்தில் இவர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அக் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
யாருக்கும் அடிபணிந்து போவது எமது நோக்கமல்ல மக்களின் விடுதலைக்காகவே எமது அரசியல் பயணமாகும்.
அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வெற்றிபெறும் எமது உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைவரான இரா.பிரபாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.