Ad Widget

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

வடக்கு, கிழக்கு , இணைக்கப்பட வேண்டும், அவ்விணைப்புக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டு என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

என்றாவது ஒருநாள், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினை தீரும் என்று நம்புகின்றேன். அந்தக் கனவு என்றாவது ஒரு நாள் நனவாகும் .

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு, போர்க்குற்ற விசாரணை நடத்தத் தேவையில்லை என தான் ஒரு போதும் கூறவில்லை தனது கருத்து, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , வேண்டுமென்று சிலரால் திரிபுபடுத்தி, மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது ‘பிரதேசத்துக்கு பிரதேசம், மொழிக்கு மொழி, மாறி மாறிப் பேசுபவன் நானல்ல.

1988- 1989ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் பெரும்பான்மையின ,இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அந்தக் கொலைகளுக்கெதிராக முதன்முறையாக ஐக்கிய நாடுகள், ஜெனீவா வரை சென்றவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷ, வாசுதேவ நாணயக்கார போன்றோராவர். அவர்கள் சென்றதைச் சரியானது என்று, அன்று நான் சொன்னேன்.

உள்நாட்டில் தீர்வில்லை, நீதியில்லை, நியாயமில்லை என்றும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ,இழந்துதான் அந்தப் பிரச்சினைகளை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றனர்.

அதேபோல ,இன்றும் தமிழ் மக்களுக்கு ,இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ,இல்லாத காரணத்தால்தான், ஐக்கிய நாடுகள் வரை சென்றுள்ளனர்.

ஆகவே, ஐக்கிய நாடுகள் செல்ல வேண்டாம் என்று கூறுவார்களானால், உள்நாட்டில் சரியான நீதிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றே நான் கூறியிருந்தேன்’

வடக்கு, கிழக்கு , இணைக்கப்பட வேண்டும், அவ்விணைப்புக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டு.

எனினும், கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சமமாக வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற மக்கள் மத்தியில் ஆதரவு ,இருக்கின்றதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

Related Posts