வடக்கு – கிழக்கில் 9 மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
“நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 18ஆம் திகதி நடைமுறைக்கு வரும்” என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாகவும் மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதி ரி. கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியகவும்
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மல்லாகம் மேலதிக மாவட்ட நீதியாகவும் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும்
ஹெப்பட்டக்கொல்லவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன், மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி ஏ.ஏ.றியாழ், வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் அவிசாவலை மாவட்ட நீதிவான் ஜுவராணி கருப்பையா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.