Ad Widget

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பணிகள் தொடர்பில் இராணுவம் விளக்கம்

இலங்கை பாதுகாப்பு படை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சில பணிகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

வடக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுதல், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்தல் மற்றும் மக்களை மீள்குடியேற்றுதல் போன்ற பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

இலங்கை பாதுகாப்புப் படையினரின் வடக்கு கிழக்கு பங்களிப்பு தொடர்பாக த ஹிந்து பத்திரிகை இலங்கை இராணுவத்திடம் வினவியதற்கு இராணுவத் தலைமையகம் இவ்வாறு பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக முக்கிய சந்தர்ப்பங்களில் துருப்புக்களை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்புவது தொடர்பாக எப்போதும் கவனம் செலுத்துவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related Posts