வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

award

குறித்த நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

யுத்தம் மற்றம் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும் ஊடக தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இவ்விருதானது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 ஊடகவியலாளர்களுக்கும், சமூக மட்டத்தில் வேலை செய்யும் சிவில் அமைப்புக்களுக்கும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான ர.தயாபரன், எஸ்.செல்வகுமார் கிளிநொச்சியைச் சேர்ந்த எஸ்.பாஸ்கரன், வவுனியாவைச் சேர்ந்த கி.வசந்தரூபன், மன்னாரைச் சேர்ந்த றொசேரியன் லெம்பேட் ஆகியோருக்கு இவ்விரு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் உட்பட ஊடகவியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் ஆசியிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts