Ad Widget

வடக்கு ஆளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து தனது செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஆளுநரின் கடமையேற்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், மாகாண அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில், பிஎஸ்எம் சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Related Posts