Ad Widget

வடக்கு அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

வடமாகாண அமைச்சர்கள் நால்வரை மாற்றுவது குறித்து தன்னிடம் எந்தவித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் சிலரை மாற்றுமாறு சிலர் கோரிக்கைகள் விடுத்திருப்பது உண்மை. ஆனால், நேரடியாக தன்னிடம் எந்தவிதமான கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் அல்லது அமைச்சர்கள் மீது ஏதாவது குற்றங்கள் இருப்பின் அதனை தன்னிடம் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் குற்றங்கள் ஏதாவது இருப்பின், அவற்றினை அறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வடமாகாண முதலமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts